Ana SayfaMealler › J.T.Foundation
JT

J.T.Foundation

J.T.Foundation
J.T.Foundation meali ile okumaya başla
Fecr 1 / 30
1
விடியற் காலையின் மீது சத்தியமாக,
J.T.Foundation 89:1
2
பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
J.T.Foundation 89:2
3
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
J.T.Foundation 89:3
4
செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
J.T.Foundation 89:4
5
இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
J.T.Foundation 89:5
6
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
J.T.Foundation 89:6
7
(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
J.T.Foundation 89:7
8
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
J.T.Foundation 89:8
9
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
J.T.Foundation 89:9
10
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
J.T.Foundation 89:10
11
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
J.T.Foundation 89:11
12
அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
J.T.Foundation 89:12
13
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
J.T.Foundation 89:13
14
நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.
J.T.Foundation 89:14
15
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.
J.T.Foundation 89:15
16
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.
J.T.Foundation 89:16
17
அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
J.T.Foundation 89:17
18
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
J.T.Foundation 89:18
19
இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
J.T.Foundation 89:19
20
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
J.T.Foundation 89:20
21
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
J.T.Foundation 89:21
22
உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
J.T.Foundation 89:22
23
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
J.T.Foundation 89:23
24
என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே! என்று அப்போது மனிதன் கூறுவான்.
J.T.Foundation 89:24
25
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
J.T.Foundation 89:25
26
மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
J.T.Foundation 89:26
27
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
J.T.Foundation 89:27
28
நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
J.T.Foundation 89:28
29
நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
J.T.Foundation 89:29
30
மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
J.T.Foundation 89:30
Fecr suresi tamamlandı