Ana SayfaMealler › J.T.Foundation
JT

J.T.Foundation

J.T.Foundation
J.T.Foundation meali ile okumaya başla
Mutaffifın 1 / 36
1
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
J.T.Foundation 83:1
2
அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
J.T.Foundation 83:2
3
ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
J.T.Foundation 83:3
4
நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
J.T.Foundation 83:4
5
மகத்தான ஒரு நாளுக்காக,
J.T.Foundation 83:5
6
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
J.T.Foundation 83:6
7
ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது
J.T.Foundation 83:7
8
'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
J.T.Foundation 83:8
9
அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
J.T.Foundation 83:9
10
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
J.T.Foundation 83:10
11
அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
J.T.Foundation 83:11
12
வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
J.T.Foundation 83:12
13
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான்.
J.T.Foundation 83:13
14
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
J.T.Foundation 83:14
15
(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
J.T.Foundation 83:15
16
பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
J.T.Foundation 83:16
17
எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
J.T.Foundation 83:17
18
நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது.
J.T.Foundation 83:18
19
இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
J.T.Foundation 83:19
20
(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
J.T.Foundation 83:20
21
(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
J.T.Foundation 83:21
22
நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
J.T.Foundation 83:22
23
ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
J.T.Foundation 83:23
24
அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
J.T.Foundation 83:24
25
(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
J.T.Foundation 83:25
26
அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
J.T.Foundation 83:26
27
இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.
J.T.Foundation 83:27
28
அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
J.T.Foundation 83:28
29
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
J.T.Foundation 83:29
30
அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
J.T.Foundation 83:30