Ana SayfaMealler › J.T.Foundation
JT

J.T.Foundation

J.T.Foundation
J.T.Foundation meali ile okumaya başla
Abese 1 / 42
1
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
J.T.Foundation 80:1
2
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
J.T.Foundation 80:2
3
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
J.T.Foundation 80:3
4
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
J.T.Foundation 80:4
5
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
J.T.Foundation 80:5
6
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
J.T.Foundation 80:6
7
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
J.T.Foundation 80:7
8
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
J.T.Foundation 80:8
9
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
J.T.Foundation 80:9
10
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
J.T.Foundation 80:10
11
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
J.T.Foundation 80:11
12
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
J.T.Foundation 80:12
13
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
J.T.Foundation 80:13
14
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
J.T.Foundation 80:14
15
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
J.T.Foundation 80:15
16
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
J.T.Foundation 80:16
17
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
J.T.Foundation 80:17
18
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
J.T.Foundation 80:18
19
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
J.T.Foundation 80:19
20
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
J.T.Foundation 80:20
21
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
J.T.Foundation 80:21
22
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
J.T.Foundation 80:22
23
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
J.T.Foundation 80:23
24
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
J.T.Foundation 80:24
25
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
J.T.Foundation 80:25
26
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
J.T.Foundation 80:26
27
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
J.T.Foundation 80:27
28
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
J.T.Foundation 80:28
29
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
J.T.Foundation 80:29
30
அடர்ந்த தோட்டங்களையும்,
J.T.Foundation 80:30