1
(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
2
நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
3
மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
4
உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
5
அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.
6
(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.
7
இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.
8
மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-
9
அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.
10
காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.
11
என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.
12
இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.
13
அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).
14
இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.
15
பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
16
அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.
17
விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.
18
நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.
19
அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
20
பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
21
பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.
22
பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான், இன்னும் (முகஞ்) சுளித்தான்.
23
அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.
24
அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.
25
இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை (என்றும் கூறினான்.)
26
அவனை நான் "ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன்.
27
ஸகர் என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?
28
அது (எவரையும்) மிச்சம் வைக்காது, விட்டு விடவும் செய்யாது.
29
(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.
30
அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
Sonraki 26 ayet →