1
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
2
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
3
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
4
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
5
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
6
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
7
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
8
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
9
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
10
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
11
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
12
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
13
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
14
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
15
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
16
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
17
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
18
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
19
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
20
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
21
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
22
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
23
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
24
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
25
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
26
'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
27
இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
28
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:
29
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:
30
இன்னும், நீண்ட நிழலிலும்,
Sonraki 30 ayet →